வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வெண்படலம் -1

உருண்டை வடிவம்,உருளும் உலகம்;
இருண்ட பயணம், இரவில் உலகம்;
கருத்த முகில்கள், கலங்கும் உலகம்;
அருமையான(து) இந்த உலகம்.



அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற‌
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.




இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.




.....................................................

சிறுவர்களுக்கான‌ பாடல்களை
எளிய வெண்பாவில் சொல்லும் முயற்சி.