வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கல்கண்டு கவிதை

கல்கண்டு




சருகாகும் வரையிலும்
மணம் வீசி வாழும்
மகிழ்ச்சியைக் " கல் "
பூக்களைக் " கண்டு "






கரையைத் தொடுவதில்
வெற்றியோ தோல்வியோ
விடா முயற்சியைக் " கல் "
நீர் அலையைக் " கண்டு "






தேய்வதால் கவலையில்லை
என்றாவது பெளர்ணமியாகும்
நம்பிக்கையைக் " கல் "
நிலவைக் " கண்டு "





சுட்டெரிக்கும் சூரியனையே
தொட்டுவிடத் துடிக்கும்
துணிச்சலைக் " கல் "
பீனிக்சு பறவையைக் " கண்டு "





பாறையே ஆனாலும்
மோதிச் சிதைக்கின்ற
உறுதியைக் " கல் "
உளியினைக் " கண்டு "





வேர்கள் இருந்தாலும்
விழுதுகள் ஊன்றும்
எச்சரிக்கையைக் " கல் "
ஆலமரத்தைக் " கண்டு "

( படித்ததில் பிடித்தது - சி.கருணாகரசு அவர்களின் வரிகள் )

இனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை ( கண்டி- Candy )




" கற்கண்டு " , " நூற்கண்டு " நாம் நாளும் சொல்லும் சொல். இவற்றோடு உறவுடையவையே
" உப்புக்கண்டம் " , தயிர்க்கண்டம் " என்பனவும். இந்தக் கண்டு - கண்டம் என்னும் சொற்களுக்கு உருண்டு திரண்டது என்பதே மூலப்பொருள். சீனிப்பாகு உருகி இறுகிக் கல்லானது. நூல் தனித்தனி இழையாக இருந்தது பந்தாகச் சுற்றப்பட்டு உருண்டையானது, இது
நூற்கண்டு எனப் பெயர் பெற்றது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியில் உப்பினைச் சேர்த்துக் காய வைத்து எடுத்துக் கொள்கின்றோம். இது உப்புக்கண்டம். தண்ணீர் போல் இருந்த பால் பிரை குற்றியவுடன் கட்டித்தயிரானது. இதுவே தயிர்க்கண்டம்.

ஒன்றோடு ஒன்றாய் இறுகிச் சேர்ந்த பொருள் தனிப்பொருளாகத் தனித்தனி பகுதியாக வேறொன்றி லிருந்து பிரிந்துவிடும். இதன் வழியாகத்தான் இந்த மண்ணுலகில் தனியாகப் பிரிந்திருக்கும் நாட்டுப் பகுதிகள் இந்தியத் துணைக்கண்டம், அமெரிக்காக் கண்டம் எனக் கண்டப் பெயரால் அழைக்கப்பட்டன.



ஒரு நூலில் அமைந்த தனித்தனி உட்பகுதிகள் கூட இந்த வகையில் தான் கண்டம் - காண்டம் எனப்பட்டதும்.

கரும்பைச் சாறு பிழிந்து வெல்லம் செய்கிறோம். இந்த வெல்லப்பாகு இறுகியதும் சருக்கரைக் கட்டி என்று பெயர் பெறுகிறது. இந்தச் சருக்கரைக் கட்டி உருண்டு திரண்டிருப்பதால் " சருக்கரைக் கண்டி " என்றும் வழங்கப் பெறுகிறது. கண்டமாய் இருப்பது கண்டியாகும். அதாவது உருண்டு திரண்டிருப்பது என்பது இதற்குப் பொருள்.

தமிழில் தோன்றிய இந்தச் " சருக்கரைக் கண்டி " என்னும் பொருள் ஆங்கிலத்தில் " Candy "
என்று அப்படியே அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு,இத்தாலி,பெர்சிய,அரபு என்று மேலைமொழிகள் பலவற்றிலும் சருக்கரைக் கண்டி " Sugar Candy " , " Succhero Candy " என்பனவாகச் சொல்லப்பட்டு வருகின்றன.

இனிப்பான இந்தக் கண்டிச் சொல்லில் கசப்பான உண்மை ஒன்றிருப்பது என்னவென்றால் மாமேதை கீற்று ( SKEAT ) போன்றோர் கூட இச்சொல்லின் மூலமறியாமல் கூறியிருப்பதுதான்.

Candy - to crystallise ; (F., Ital., Pers ) F. se candir, - to candie ; Cot., Ital. candire - to candy ; Ital. candi - candy; succero candi - sugar candy; Pers. and Arab. quand, sugar - candy; Whence; Arab. qundi. - made of sugar. The word ia Aryan ( Pers ) ; cf . Skt. khandava - sweetmeats; Khanda - a broken piece.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

களம் - Collum




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

நமது சொற்களத்தில் இப்பொழுது காணவுள்ள ஒரு சொல் " களம் " ஆகும்.

நெற்கதிர்கள் அறுக்கப்பட்டுக் களத்திற்கு வருகின்றன; வீரர்கள் போர்க்களத்தில் தங்கள் பகைவர்களைச் சந்திக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்; கலைஞர்கள் கூத்தாடும் ஆடுகளத்தில் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருக்கிறார்கள்; ஆயுதக்களத்தில் ஏராளமான ஆயுதங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.இப்படி இன்னும் பலப்பல களங்கள் நம் மொழி வழக்கில் இடம்பெற்றுள்ளன.

மேற்சொல்லப்பட்ட தொடர்களில் வரும் எல்லாக்களமும் ஒரே பொருள் உடையவை. வயற்களம், போர்க்களம், ஆடுக்களம், ஆயுதக்களம் போன்ற எக்களம் ஆயினும் அனைத்திற்கும் கூடும் இடம் என்கின்றவொன்றே அடிப்படைப் பொருளாகும்.

பத்துக் காணி நிலத்தில் விளைந்த நெல் ஓரிடத்தில் குவிக்கப்படும் இடமே வயற்களம்; இருநாட்டுப் படைவீரர்களும் ஓரிடத்தில் வந்து கூடிப் போர் செய்யும் இடமே போர்க்களம்; ஆயுதங்கள் குவிக்கப்பட்ட இடமே ஆயுதக்களம்; ஊர்மக்கள் யாவரும் வீடுகளைவிட்டுக் கூத்து நடக்கும் இடத்தில் கூடியிருக்கும் இடமே ஆடுக்களம்.

களம் என்னும் சொல் கள் + அம் என்பதாகப் பிரியும். இந்தக் " கள் " என்பதற்கு கூட்டம் என்பதே வேர்ப்பொருள். மாடு - மாடுகள்; வீடு - வீடுகள் என்றவிடத்தில் " கள் " பன்மையீறு எனப்படும்.இந்தப் பன்மையீறு " கள் " ளும் " களம் " சொல்லின் " கள் " ளும் வேறல்ல.

மக்கள் பருகும் " கள் " உண்டல்லவா அதுகூட இந்தக் கூட்டப் பொருளில் உருவானதே. மாலையில் வெறுங்கலத்தைக் கட்டிவிட்டு வரும் " கள் " இறக்குபவர் மறுநாள் காலையில் கலயம் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார். இங்கே நிகழ்ந்தது சிறுதுளிப் பெருவெள்ளம் என்கின்ற உண்மையே.

" களம் " என்னும் சொல்லிற்குக் கழுத்து என்னும் பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்திலும், திருமந்திரத்திலும் இப்பொருளில் ஆட்சி உண்டு. மேலைய களங்கட்கும் இந்தக் கழுத்துக் களத்திற்கும் உறவிருக்கிறது. நமது உடம்பில் கழுத்து வரை உள்ள உடல் ஒரு பகுதி. கழுத்திற்கு மேலே உள்ள கண், மூக்கு, வாய் , காது ஆகியவை அடங்கிய தலை, பிறிதொரு பகுதி. இந்த இரு பகுதிகளையும் கூட்டுவிக்கும் காரணத்தால் தான் கழுத்திற்குக் " களம் " என்னும் பொருள் பொருந்துவதாயிற்று.




C.O.D அகராதி கழுத்தைக் குறிக்கும் " neck " என்னும் சொல்லிற்குக் கூறும் முதற்பொருள் வரையறை இதுதான்.

neck - the part of the body of an animal or human being that connects the head and the trunk.

இலத்தீன் மொழியில் " Collum " என்னும் சொல் கழுத்தைக் குறிக்கும். இந்த " Collum " என்பதிலிருந்துதான் மேற்சட்டையின் கழுத்துப் பட்டியைக் குறிக்கும் " Collar " என்னும் சொல் உருவானதாக ஆங்கில அகராதிகள் தெரிவிக்கின்றன.



Collum - the neck, Lit. of men and animals; - cassela Latin Dictionary

Collar - (F.,L.) ME. coler; OF. colier, - a coller; L. collare - a band for the neck;L . Collum - the neck ; + AS. heals; G. hals - neck. - SKEAT.

ஆங்கிலோ சாக்சன், செருமன் மொழிகளில் " களம் " என்னும் தமிழின் நெருங்கிய வடிவே இருப்பதைக் கீற்று அகராதியில் காண்க.

தமிழைச் சொல்லித் தரும் கவிதை


ஊடகங்கள் தமிழைச் சொல்லித் தருகின்றதா? இல்லையே, இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள் . இப்படி எல்லாம் கவிஞர்களும், திரைப்படங்களும், செய்தித்தாளும் நடைப் போட்டால் தமிழ் தான் தமிழரின் உதட்டை விட்டு ஒடி விடுமா ? தமிழின் பெருமையைப் புரியும்.
வாழ்க தமிழ் . வளர்க தமிழ்

அந்தக் கவிதையை எழுதிய அன்பருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

காபி என்பதா ..?
காப்பி என்பதா…?
காஃபி என்பதா ..?
“குளம்பியே” விட்டேன்.. !

( படித்ததில் பிடித்தது - அப்துல் கையூம் அவர்களின் வரிகள் )

சொல் அகராதி


1. coffee - குளம்பி

எழுந்து வந்த " எல் "




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் என்பது திருவாசகம். பாடும் பாட்டிற்கு உரிய பொருளின் ஆழத்தை உணர்வதுமட்டும் போதாது. சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் உள்ள பொருளையும் நாம் ஆழமாக உணர வேண்டும்.

" எல் " என்னும் சொல் கதிரவனைக் குறித்தது என்று அறிவது முதல்நிலை. ஏன் கதிரவனை
" எல்" என்று சொன்னோம் என்று அறிவது இரண்டாம் நிலை.

ஒரு தமிழ்ச்சொல் என்ன காரணத்தால் என்ன பொருளில் எந்த வேரிலிருந்து பிறந்திருக்கின்றது என்று நாம் முதலில் கண்டு தெளிய வேண்டும். அந்தத் தெளிவு நமக்கு வந்த பிறகுதான் பிற மொழிகளில் புழங்கும் இன்ன இன்ன சொற்களுக்கு இந்தத் தமிழ்ச்சொல் மூலமாக இருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். உலக மொழிகளின் வேர்ச்சொல் அறிஞர்கள் கையாளும் நெறிமுறைகளில் அடிப்படையானது இதுவே.

கதிரவன் " எல் " என்று அழைக்கப்பட்டதற்கு அது ஒளியுடையதாய் இருப்பதே காரணம் என்று பலரும் கூறுகின்றனர். " எல்லே இலக்கம் " என்னும் தொல்காப்பிய நூற்பாவினை இதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு கூறும் அறிஞர்களிடம் " எல் " என்னும் சொல்லிற்கு " ஒளி " என்னும் பொருள் எவ்வாறு தோன்றியது என்று கேட்போமானால் அவர்களால் அதற்கு விடை சொல்ல முடியாது. ஆதலால் கதிரவன் ஒளியுடைதாய் இருப்பதால் " எல் " என்று சொல்லப் பட்டது என்னும் கருத்து பொருத்தமாகப் படவில்லை.

" எல் " என்பதற்கு உயர்தல் , மேலெழுதல் என்பதே மூலப்பொருள்.பின்வரும் சொற்களைக் கவனியுங்கள்.

எல்- எல்பு- எம்பு - எம்புதல் = மேலெழுதல்

எல் - எல்கு - எக்கு - எக்குதல் = வயிற்றை மேலே உயர்த்தல்

எல் - எல்கு - எக்கு - எக்கர் = நீர்நிலைகளில் உயர்ந்திருக்கும் மணல்திட்டு

இப்படியாகப் பல சொற்கள் " எல் " வழி உருவாகியுள்ளன.



கதிரவன், தோற்றம், கலையில் கீழ்த்திசையில் கடலில் தோன்றி மேலெழுந்து உயர்ந்து வருவது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அதன் காரணமாகவே கதிரவனுக்கு " எல் " என்னும் பெயரைப் பழந்தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன் சூட்டினார்கள்.

" அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி "

என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடரில் பருதியாகிய கதிரவனின் எழுதரும் தன்மை சுட்டப் பட்டுள்ளது.

கதிரவனின் சிறப்புக்களில் கடலில் காலையில் மேலெழுந்து உயர்தல் போன்ற காட்சித் தன்மையே அதன் முதற் பொருள். ஒளியுடையதாய் இருக்கும் அதன் சிறப்பு வழிப்பொருள்