வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

௬.உரிமை ஊதியமும் ( Royalty ) , ஊதியக் கவிதைகளும்

" Royalty " என்னும் ஆங்கிலச்சொல்லை நாம் நன்கு அறிவோம். நூலாசிரியருக்கு வழங்கப்பெறும் தொகையை அது குறிகின்றது. ஊதியத்தில் ஒரு பங்கு என அகராதிகள் கூறுகின்றன். எழுத்தாளருக்கு உள்ள உரிமையை இது விளக்க வில்லை. நூலாசிரியருக்கு ஊதியப் பெற உரிமை உண்டு என்பதை உணர்த்துகிறது. ஒரு அலுவலகத்தில் " Royalty "
என்னுஞ் சொல்லுக்கு உரிமை ஊதியம் என்பதைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்பொழுது அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இது ஏற்ற சொல் இல்லை என்று சொல்லுபவருக்கு கூறுவது இது தான்.

எடுத்த எடுப்பிலேயே நல்ல மொழிபெயர்ப்புகள் கிடைத்து விடமாட்டா. அவை காலப்போக்கிலே
அரும்பாகி மொட்டாகி மலராகும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகும். புளிக்குங்காய் இனிக்கும் பழமாக மாறிவிடும் !

" கலெக்டர் " என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம்." தண்டல் நாயகம் " என்னும் பெயரை அமைத்துத் தடுமாற்றம் அடைந்தோம். பின்னர் அது படிப்படிப்பாக " மாவட்ட ஆட்சித்தலைவர் " என்று மாறியது. அது இன்னும் " மாவட்ட ஆட்சியாளர் " என்னும் நல்ல மொழிபெயர்ப்பாக ஆகியது. மேலும் சுருங்கி, " மாவட்ட ஆட்சியர் " என்று ஆகின்றது.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )


" Royalty " என்பதை நினைக்கும்பொழுது நினைவிற்கு வரும் சொல் " Alimony ".
அதை பாரமரிப்புத் தொகை ( ஜீவானம்சம் ) என்று அழைப்போம். இரண்டுமே ஊதியம் பெற இருக்கும் உரிமையை உணர்த்தும் சொற்கள்.

முயற்சி செய்வோம்.காலம் இரண்டிற்மே இதைவிட அழகான சொற்களைத் தரும் என்று நம்புவோம்.

ஊதியம் என்றது ஒரு சில கவிதைகளை நினைவிற்கு வருகிறது.

முதலாவது இரவி செல்லத்துரையின் வரிகள்

இறைவனோ உலகத்தின் படைப்பாளி
உழைப்பவனோ உலகத்தின் படைப்பாளி
முதலிட்டு உழைப்பவனோ முதலாளி
வியர்வை சிந்தி உழைப்பவனோ தொழிலாளி
நாட்டுக்காய் உழைப்பவனோ போராளி
கல்வியில் உயர்பவனோ அறிவாளி
உழைக்காமல் உறங்குபவன் கடனாளி
உறக்கத்தில் வாழ்பவனோ நோயாளி
சுயசிந்தனை அற்றவனோ ஏமாளி
சிந்திக்க தெரியாதவன் கோமாளி
உழைத்து வாழ்பவனோ பலசாலி
உழைப்பாளி உலகத்தின் படைப்பாளி
படைப்பாளி உலகத்தின் உழைப்பாளி

இரண்டாவது என்னுடைய வரிகள்,

உத்தமர் என்றால்
உதாரணம் அடுக்கிடுவார்கள்
உண்மையாய் வாழ் என்றால்
உன் வேலையைப் பார் என்றிடுவார்கள்
உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் என்றிட்டால்
உண்மையும்
உழைப்பும்
ஊமையடா என்றிடுவார்கள்
இது பொல்லாத உலகமடா
பொய்யும் புரட்டும்
செய்யும் வேலையடா என்றிடுவார்கள்

முன்றாவது Shylaja அவர்களின் வரிகள் ( ஒன்றும் புரியவில்லை! )

வருவது என்ன
எதுவும் புரிவதில்லை
உழைப்பு ஒருபக்கம்
ஊதியம் வேறு பக்கம்
காயங்கள் ஓரிடம்
மருந்துகள் வேறிடம்
பிரார்த்தனைகள் ஓரிடத்தில் நடக்க
வரங்கள் இன்னொரு இடத்தில் பெறப்படுகின்றன
கேள்விகள் கேட்பது ஒரு வாசலில்
பதில்கள் வருவது மற்றொரு வாயிலில்
நீரின் சுவையை வேர்கள் பருக,
வளர்வதென்னாவோ செடிகள்தானே?
எதிர் எதிரே இருந்தாலும்
வானின் நிறத்தை
மண்தான் அறியுமா?
வாசல்கள் எதற்கு
கதவுகளின்றி?
ஒன்றும் புரியவில்லை!